பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், போதகாடு ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் பணியினை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
- மானியத்தில் வழங்கப்பட்டுள்ள தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- பணிகளை தரமானதாக மேற்கொள்ள வேண்டு மெனவும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளின் பயன் முழுமையாக கிடை த்திட தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பி.துறிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்குவதற்கு தேவையாக புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களின் தரம், எண்ணிக்கை ஆகியவற்றையும், போதகாடு ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டப்பட்டு வரும் பணியினையையும், போதகாடு, மாரியம்மன் கோவிலூரில் பழங்குடியினர் நலஅலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கபள்ளியினையும் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், வெங்கடசமுத்திரம் கிராமத்தில் உள்ள வாணியாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் ரூ.5.47 லட்சம் (100 சதவீத) மானியத்தில் வழங்கப்பட்டுள்ள தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பணிகளை தரமானதாக மேற்கொள்ள வேண்டுமெனவும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளின் பயன் முழுமையாக கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் உரிய அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.