உள்ளூர் செய்திகள்

ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள பகுதியை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் ஆழ்துளை கிணறு கலெக்டர் ஆய்வு

Published On 2022-06-24 04:54 GMT   |   Update On 2022-06-24 04:54 GMT
  • தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 35 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
  • பணியை விரைந்து மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு என கலெக்டர் முரளிதரன் அறிவுறுத்தினார்.

தேனி:

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் நலத் திட்டங்களை செயல்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துவதே அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த தொகுப்புகளில் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள், விதை, நாற்றுகள் வழங்குதல், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக புதர்களை நீக்கி, நீர் பாசன வசதி ஏற்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலமாக தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய நோக்கமான நிகர சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கப்படும்.

தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-22-ம் ஆண்டில் ேதர்வு செய்யப்பட்ட 13 கிராம பஞ்சாயத்துகளில் 20 தொகுப்புகள் கண்டறியப்பட்டு 422 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 35 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மேற்கண்ட கிராம பஞ்சாயத்துகளில் 10 பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி கிராம பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்ட 3-வது தொகுப்பில் 23 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 510 அடி ஆழத்தில் ரூ.1.54 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்துளை கிணற்றுக்கு தேவையான மின் மோட்டார், புதிய இலவச மின் இணைப்பு மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் முரளிதரன் ெதரிவித்தார்.

Tags:    

Similar News