கோவையில் பெண்ணை ஆபாசமாக கிண்டல் செய்த வாலிபர் கைது
- பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் பிரவீன் (வயது 33) என்பவர் வசித்து வருகிறார்.
- அடிக்கடி பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டி அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
கோவை:
கோவை ரத்தினபுரியை சேர்ந்த 38 வயது பெண். இவர் சமையல் வேலைக்கு சென்று வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் பிரவீன் (வயது 33) என்பவர் வசித்து வருகிறார்.
இவர், அடிக்கடி பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டி அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த பிரவீன் அந்த பெண்ணிடம் மீண்டும் தகராறு செய்தார். அப்போது அவர் தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண்ணை கீழே தள்ளினார்.
இது குறித்து அவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.