உள்ளூர் செய்திகள்
தருமபுரி அங்காடியில் ரூ.8½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
- அங்காடிக்கு நேற்று 1,645 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
- மொத்தம் ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 198 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று 1,645 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுகூடு அதிகபட்சமாக ரூ.658-க்கும், குறைந்த பட்சமாக ரூ.289- க்கும், சராசரியாக ரூ.521.09-க்கும் விற்பனையானது.
மொத்தம் ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 198 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.