உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த தென்னை மரங்கள்

Published On 2023-06-04 08:54 GMT   |   Update On 2023-06-04 08:54 GMT
  • சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் சூறாவளி காற்றும், பலத்த இடியும் மின்னியது.
  • ராமச்சந்திரன் தோட்டத்தில் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது.

சூலூர்,

கோவை சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி அருகே ராயர்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஊர் கவுண்டர் தோட்டம் என்னும் பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் தென்னை மரம் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. நேற்று மாலை சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும், பலத்த இடியும் மின்னியது.

அப்போது திடீரென வெடிப்பு சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில், தோட்டத்தில் இருந்த 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தென்னை மரங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகியது.

இதுகுறித்து தோட்ட உரிமையாளர் ராமச்சந்திரன் கூறும் பொழுது வீட்டில் இருந்தபோது திடீரென பலத்த ஓசை கேட்டதாகவும் வெளியே ஓடி வந்து பார்த்தபோது தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது என்றார்.

Tags:    

Similar News