உள்ளூர் செய்திகள்

கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published On 2023-06-08 14:56 GMT   |   Update On 2023-06-08 14:56 GMT
  • சென்னை கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
  • இந்த மருத்துவமனையை வரும் 15-ம் தேதி ஜனாதிபதி திறந்து வைக்க உள்ளார்.

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

சுமார் 4.89 ஏக்கர் நிலத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி ஜனாதிபதி தரவுபதி முர்மு இந்த மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில், கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

வரும் 15-ம் தேதி ஜனாதிபதி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரடி ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News