உள்ளூர் செய்திகள்
இ.சி.ஆரில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலை - 21ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்
- இ.சி.ஆரில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.
- புதிய ஆலையை வரும் 21-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.
மாமல்லபுரம் :
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பேரூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் 4,276.44 கோடி ரூபாய் மதிப்பில், 85.51 ஏக்கர் நிலத்தில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கவுள்ளது.
இந்த ஆலையை வரும் 21-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.
இந்நிலையில், விழா நடைபெறும் பகுதியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் இன்று ஆய்வு செய்தார்.
விழா ஏற்பாடு, பாதுகாப்பு, பார்வையாளர் பகுதி, முக்கிய பிரமுகர்கள் வருகை உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அப்பகுதியை ஆய்வு செய்தார்.
அப்போது மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், சென்னை குடிநீர் வாரியம் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.