உள்ளூர் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்லில் வேன் மோதி பலியான போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதி - முதல்வர் ஸ்டாலின்

Published On 2022-06-12 07:22 GMT   |   Update On 2022-06-12 07:22 GMT
  • நாமக்கல்லில் கார் விபத்தை ஆய்வு செய்தபோது வேன் மோதியதில் 2 போலீசார் உயிரிழந்தனர்.
  • நாமக்கல்லில் வேன் மோதி பலியான போலீசார் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்.

சென்னை:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் இருந்த போலீசார் மீது சுற்றுலா வேன் மோதியதில் போலீஸ்காரர் தேவராஜன், சிறப்பு எஸ்.ஐ சந்திரசேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நாமக்கல் அருகே வேன் மோதி உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News