உள்ளூர் செய்திகள்

மகாவீர் ஜெயந்தி தினம் 4-ந் தேதி மதுக்கடைகள் மூடல்:கலெக்டர் உத்தரவு

Published On 2023-03-31 09:23 GMT   |   Update On 2023-03-31 09:23 GMT
  • மகாவீர் ஜெயந்தி தினம் வருகிற 4- ந்தேதி கொண்டாடப்படுகிறது.
  • கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும்

 கடலூர்:

கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

மகாவீர் ஜெயந்தி தினம் வருகிற 4- ந்தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அன்று ஒரு நாள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். அன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார்உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News