உள்ளூர் செய்திகள்
- 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தூய்மைக்கான மக்கள் இயக்க பணிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
- குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்து விளக்கவுரை நகராட்சி ஆணையர் ஹேமலதா நடத்தினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி யில் நகரங்களின் தூய்மை க்கான மக்கள் இயக்கம் சார்பாக வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அரசினர் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தோப்புத்துறை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி காயிதே மில்லத் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேதாரண்யம் நகராட்சி ஆணையா் ஹேமலதா முன்னிலையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
பின்னர் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்து விளக்கஉரை நகராட்சி ஆணையர் ஹேமலதா நடத்தினார். நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.