கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல்: 10 பேர் மீது வழக்கு
- இதனை பார்த்த அருண்குமாரின் தாய் இளவரசி தடுக்க முயன்ற போது அவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- அருண்குமார், இளவரசி மற்றும் குணசங்கர் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடலூர்:
கடலூர் பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவரது பெரியப்பா காசிநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அருண்குமாரை , குணசங்கர், ரவிக்குமார் மற்றும் ஒரு சிலர் சேர்ந்து தாக்கினார்கள். அப்போது இதனை பார்த்த அருண்குமாரின் தாய் இளவரசி தடுக்க முயன்ற போது அவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகராறில் குணசங்கர் என்பவரை தாக்கியதால் அவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அருண்குமார், இளவரசி மற்றும் குணசங்கர் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் குணசங்கர், ரவிக்குமார் உள்பட 6 பேர் மீதும், குணசங்கர் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் உள்பட 4 பேர் மீதும் என 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.