உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் பிளஸ்-2 மாணவி சாவு எதிரொலி: வேப்பூர் அருகே கிராம மக்கள் போராட்டம்
- சின்னசேலம் பிளஸ்-2 மாணவி சாவு எதிரொலியாக வேப்பூர் அருகே கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- இதனால் காலை 10 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தில் வசிக்கும் ராமலிங்கம் செல்வி மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். இதன் எதிரொலியாக இன்று வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சி எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதனால் காலை 10 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கலையாத பொதுமக்கள் போராட்டத்தை மீண்டும் வலுப்படுத்தி வருகின்றனர்.