உள்ளூர் செய்திகள்

கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

Published On 2023-10-06 15:01 IST   |   Update On 2023-10-06 15:01:00 IST
  • மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் தவமணி நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினாா்
  • பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

ஊட்டி,

கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் சித்ராதேவி தலைமை வகித்தாா். செயல்அலுவலா் ஹரிதாஸ் முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் தவமணி நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News