உள்ளூர் செய்திகள்

இந்து முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கே.கோபிநாத் 

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம், இந்து முன்னேற்ற கழகம் அறிக்கை

Published On 2022-06-09 11:17 GMT   |   Update On 2022-06-09 11:17 GMT
  • ஆய்வு என்ற பெயரில் அறநிலையத்துறையினர் பிடிவாதம் பிடிப்பது கண்டனத்துக்குரியது
  • கோவில்களை நிர்வகிக்க மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் சிவனடியார்கள் உள்ளனர்.

திருப்பூர், 

இந்து முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கே.கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு என்ற பெயரில் அறநிலையத்துறையினர் பிடிவாதம் பிடிப்பது கண்டனத்துக்குரியது.நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்றும், அதன்நிர்வாகம் மற்றும் வரவு-செலவு கணக்குகளை அவர்களேபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசும், அறநிலையத்துறையும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறது. இதனைஇந்து முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாகஅனைத்து கோவில்களையும் விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். எங்கள் கோவில்களை நிர்வகிக்க மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் சிவனடியார்கள் உள்ளனர். இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News