உள்ளூர் செய்திகள்

கோழியும்-பருந்தும்... திருமாவளவன் ருசிகரம்

Published On 2023-07-01 06:19 GMT   |   Update On 2023-07-01 06:19 GMT
  • கோழி- பருந்து இடையே நடக்கும் சண்டையை மேற்கொள்காட்டி ருசிகரமாக விளக்கம் அளித்தார்.
  • கோழி வன்முறை செய்வதாக சமூகம் சொல்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாட்டில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் அதை தவறுதலாக சித்தரித்து தங்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.

இதை கோழி- பருந்து இடையே நடக்கும் சண்டையை மேற்கொள்காட்டி ருசிகரமாக விளக்கம் அளித்தார்.

தனது குஞ்சுகளை பாதுகாக்க தாய்க்கோழி பருந்துடன் சண்டை போடுகிறது. குஞ்சை தூக்கி செல்வதற்காக பருந்து தாய் கோழியுடன் சண்டை போடுகிறது. இதில் வன்முறை செய்வது கோழியா? பருந்தா? பருந்துதானே!

ஆனால் கோழி வன்முறை செய்வதாக சமூகம் சொல்கிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது.

Tags:    

Similar News