உள்ளூர் செய்திகள்

சதுரங்க விழிப்புணர்வு போட்டி நடந்தது.

சதுரங்க விழிப்புணர்வு போட்டி

Published On 2022-07-29 09:39 GMT   |   Update On 2022-07-29 09:39 GMT
  • சதுரங்க விழிப்புணர்வு போட்டிக்கு வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.
  • கருப்பு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் வரையப்பட்டு அதில் மாணவர்கள் நின்று சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அசோகன், பேரூராட்சி துணைத் தலைவர் அன்புச் செழியன் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியர் பிச்சுமணி வரவேற்றார். போட்டியில் கருப்பு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் வரையப்பட்டு அதில் மாணவர்கள் நின்று சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி வரி தண்டலர் அமுதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News