உள்ளூர் செய்திகள்

சென்னை போலீஸ் அலுவலக ஊழியர் தற்கொலை

Published On 2023-02-13 15:05 IST   |   Update On 2023-02-13 15:05:00 IST
  • மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் திம்மாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்
  • சுந்தர்ராஜன் வீட்டில் உள்ள மாடியில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது45). திம்மாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள குற்றப்புலனாய்வு துறை போலீஸ் தலைமை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சுந்தர்ராஜன் வீட்டில் உள்ள மாடியில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சுந்தர்ராஜனின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

Tags:    

Similar News