உள்ளூர் செய்திகள்

அறுவை சிகிச்சை நடந்தபோது எடுத்த படம்.




செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்

Published On 2022-08-29 09:37 GMT   |   Update On 2022-08-29 09:37 GMT
  • தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் மகப்பேறு மருத்துவா் தீபிகா ரேஷ்மியை பரிசோதித்தனர்.
  • பிரசவம் முடிந்து தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை மேலூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் ரேஷ்மி ( வயது 24). கர்பிணி பெண்ணான இவரை தலை பிரசவத்திற்காக அவரது குடும்பத்தினர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் மகப்பேறு மருத்துவா் தீபிகா ரேஷ்மியை பரிசோதித்தனர்.பரிசோதனையில் அவருக்கு சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து ரேஷ்மிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது. அதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்து தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைகளும் பொது அறுவை சிகிச்சைகளும் செயல்பட்டு வருகிறது.

தற்போது அறுவை சிகிச்சை மூலம் பிரசவமும் வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவா் ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News