உள்ளூர் செய்திகள்
திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பாராட்டு சான்றிதழ்
- சிறந்த சேவையை பாராட்டி திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் பாராட்டு.
- சுதந்திர ்போராட்ட தியாகி ஜாம்பவானோடை நாராயணசாமி தேவரின் பேத்தி.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ரஞ்சனி பிரியா. இவரது சிறந்த சேவையை பாராட்டி திருவாரூரில் நடந்த குடியரசுதின விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சிறந்த மருத்துவருக்கான பாராட்டு சான்றிதழை ரஞ்சனி பிரியாவிடம் வழங்கினார்.
விருது பெற்ற ரஞ்சனி பிரியா, சுதந்திரப ்போராட்ட தியாகி ஜாம்பவானோடை நாராயணசாமி தேவரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.