உள்ளூர் செய்திகள்

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது.

ஸ்கேட்டிங் இசைப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

Published On 2023-02-03 08:18 GMT   |   Update On 2023-02-03 08:18 GMT
  • இசையானது நிறுத்தப்பட்டவுடன் மாணவர்கள் கீழே விழாமல் நாற்காலியில் அமர்வது போட்டியாகும்.
  • ஸ்கேட்டிங் விளையாடுவதன் மூலம் குழந்தைகளுக்கு மூளையின் ஆற்றல் அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறைகிறது.

சுவாமிமலை:

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட் மியூசிக்கல் சேர் போட்டி நடைபெற்றது.

போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் பூட்ஸ் அணிந்த ஸ்கேட்டிங்கை கால்களில் கட்டிக்கொண்டு இசை இசைக்கும் வரையில் நாற்காலியை சுற்றி வருவார்கள்.

இசையானது நிறுத்தப்பட்டவுடன் மாணவர்கள் கீழே விழாமல் நாற்காலியில் அமர்வது போட்டியாகும். ஸ்கேட்டிங் விளையாடுவதன் மூலம் குழந்தைகளுக்கு மூளையின் ஆற்றல் அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறைகிறது.

மேலும், இதன் மூலம் மாணவர்கள் கல்வியோடு புதிதாக பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. புத்துணர்ச்சியோடு படிப்பதற்கு இவ்வாறான போட்டிகள் உதவுகிறது.

போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த பள்ளி தாளாளர் கார்த்திகேயனை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.

இதில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் அம்பிகாபதி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News