உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவரை தாக்கிய பெண் மீது வழக்கு

Published On 2022-07-08 10:05 GMT   |   Update On 2022-07-08 10:05 GMT
  • கல்லூரி மாணவரை தாக்கிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • பேருந்தை வழிமறிது பெண் ஒருவர் உள்ளே சென்று வாலிபரிடம் கேள்வி கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகில் உள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 21). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார்.

கடந்த 4 ந்தேதி மாலை கல்லூரி பேருந்தில் வந்துகொண்டிருந்த போது சின்னப்பம்பட்டி அருகே பேருந்தை வழிமறித்த பெண் ஒருவர் உள்ளே சென்று முருகனிடம் உன்னுடைய நண்பன் கவின்ராஜ் எங்கடா என்று கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த முருகன் ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் கல்லூரி மாணவரை தாக்கிய பெண் சின்னப்பம்பட்டி அருகிலுள்ள அக்கறை–பட்டியை சேர்ந்த பரிமளா–தேவி என்பதும் இவருடைய மகன் பாலாஜிக்கும், கவின்ராஜ் என்ற மாணவ–ருக்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று பஸ்சில் இல்லாததால் அவருடைய நண்பர் முருகனை தாக்கியதும் தெரியவந்தது. இதுபற்றி முருகன் கொடுத்த புகாரின் பேரில் பரிமளாதேவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Tags:    

Similar News