உள்ளூர் செய்திகள்

இருதய நோய் கண்டறியும் முகாம்.

டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் இருதய நோய் கண்டறியும் முகாம்

Published On 2022-11-20 09:38 GMT   |   Update On 2022-11-20 09:38 GMT
  • இருதய நோய் 45 நபர்களுக்கு கண்டறியப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
  • மருத்துவர் பாபு மற்றும் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருத்துறைப்பூண்டி:

டெல்டா ரோட்டரி சங்கம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மணி பல்நோக்கு மருத்துவமனை இணைந்து திருத்துறைப்பூண்டி பகுதியில் இருதய நோய் கண்டறியும் முகாம் நடத்தியது.

இதில் 450 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் இருதய நோய் 45 நபர்களுக்கு கண்டறியப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனல ட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்ப ட்டனர்.

இந்த முகாமிற்கு டெல்டா ரோட்டரி சங்கத்தின் மருத்துவ சேர்மன் மணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவர் பாபு மற்றும் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். டெல்டா ரோட்டரி சங்கத்தின் சாசன தலைவர் கணேசன் மற்றும் முன்னாள் தலைவர்கள் தலைவர் தேர்வு மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News