உள்ளூர் செய்திகள்

கார் மீது மரம் முறிந்து விழுந்து கிடக்கும் காட்சி.

திண்டிவனத்தில் மரம் முறிந்து விழுந்ததில் கார்- கடை சேதம்

Published On 2022-12-26 07:36 GMT   |   Update On 2022-12-26 07:36 GMT
  • நெடுஞ்சாலை அருகே கார் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருபவர் செல்வம்.
  • மரம் விழுந்தவிபத்தில் கார் மற்றும் கடையில் இருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உதய் நகர் நெடுஞ்சாலை அருகே கார் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருபவர் செல்வம். இவர் சர்வீஸ் சென்டருக்கு வந்த காரை தனது செட்டில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் திடீரென அருகில் இருந்தமரம் முறிந்து அருகே இருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. அதேபோல அருகே பங்க் கடை நடத்தி ஒருவர் ராம் இவர் கடை மீதும் மரம் விழுந்து கடைகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது. மரம் விழுந்தவிபத்தில் கார் மற்றும் கடையில் இருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.மரம் நள்ளிரவு விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News