உள்ளூர் செய்திகள்

தல்சூர் ஆஞ்சநேயர் கோவிலில் தேர்த்திருவிழா

Published On 2023-03-31 15:33 IST   |   Update On 2023-03-31 15:33:00 IST
  • தேர் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டது.
  • மாலையில் உற்சவமூர்த்திகளை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் நடந்தது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது.

முன்னதாக சீதா, ராமா, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அபிசேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சீதா ராமா, ஆஞ்சநேயர் சுவாமிகளை அலங்கரிக் கப்பட்ட தேரில் அமர்த்தி பூஜைகள் செய்து வேதமந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ராமா, ராமா என கோசமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தினர்.

இதே போல், தேன்கனிக்கோட்டை எஸ்ஆர்ஒ தெருவில் உள்ள பழமை, வாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு அதிகாலையில் சிறப்புஅபிசேகம் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சீதா ராம லட்சுமன உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைத்து வேதமந்திரங்கள் ஒலிக்க ெசண்ைட மேளங்கள் முழங்க பக்தி கோசங்கள் விண்ணை பிளக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டது. மாலையில் உற்சவமூர்த்திகளை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு அருள்பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.

Tags:    

Similar News