உள்ளூர் செய்திகள்

சிறு குறு விவசாயி சான்றிதழ் பெற அழைப்பு

Published On 2022-06-27 07:48 GMT   |   Update On 2022-06-27 07:48 GMT
  • பிள்ளைகளத்தூர் கிராமத்தில் “சிறு குறு விவசாயி சான்று பதிவு செய்யும் முகாம்” பிள்ளைகளத்தூர் கிராம சேவை மையத்தில் நடைபெறுகிறது.
  • மேலும் விபரங்களுக்கு பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதியை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

பரமத்திவேலூர்:

பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்.செ.கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பரமத்தி வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறையின் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமமான பிள்ளைகளத்தூர் கிராமத்தில் "சிறு குறு விவசாயி சான்று பதிவு செய்யும் முகாம்" பிள்ளைகளத்தூர் கிராம சேவை மையத்தில் நடைபெறுகிறது.

சிறு குறு விவசாயிகள் அனைவரும் தவறாமல் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சிறு குறு விவசாயி சான்று பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் - 1.ஆதார் அட்டை நகல், 2. குடும்ப அட்டை நகல், 3. புகைப்படம் 4. கணணி சிட்டா (பதிவு செய்ய வரும் அலுவலர்களிடம் சர்வே எண்ணை கூறினால் எடுத்துக் கொடுப்பார்கள்) உடன் எடுத்து வந்து சிறு குறு விவசாயி சான்று பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. ேலும் விபரங்களுக்கு பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதியை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News