உள்ளூர் செய்திகள்

மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றபோது எடுத்த படம்.

விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

Published On 2023-05-05 09:02 GMT   |   Update On 2023-05-05 09:02 GMT
  • 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியை விழா கமிட்டி சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து கண்டு களித்தனர்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டபம் திறப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பூஞ்சிட்டு மற்றும் சிறியமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை விழா கமிட்டி சார்பில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

பூசனூர் கிராமத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து கண்டு களித்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பரிசுக்கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News