உள்ளூர் செய்திகள்

திசையன்விளையில் தனியார் பஸ் மீது செங்கல் வீச்சு-முகமூடி அணிந்த மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது

Published On 2022-07-26 09:47 GMT   |   Update On 2022-07-26 09:47 GMT
  • திசையன்விளை கீழ பள்ளிவாசல் அருகே சென்றபோது நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் மினி பஸ் மீது செங்கல்லை வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
  • திசையன்விளை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

திசையன்விளை:

திசையன்விளையில் இருந்து கடகுளம் வழியாக குட்டம் வரை செல்லும் தனியார் மினி பஸ் இன்று காலை 8.20 மணி அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு குட்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அந்த பஸ் திசையன்விளை கீழ பள்ளிவாசல் அருகே சென்றபோது நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் மினி பஸ் மீது செங்கல்லை வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த திசையன்விளை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர்.

Tags:    

Similar News