உள்ளூர் செய்திகள்

ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா நடந்தது.

தாய்ப்பால் வார விழா

Published On 2022-08-09 14:47 IST   |   Update On 2022-08-09 14:47:00 IST
  • அரசு மருத்துவமனையுடன் இணைந்து தாய்ப்பால் வார விழா நடத்தப்பட்டது.
  • தலைமை மருத்துவர் பானுமதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.

சீர்காழி:

சீர்காழி ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம், அரசு மருத்துவமனை இனைந்து தாய்ப்பால் வார விழா நடத்தப்பட்டது. சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். டாக்டர் மருதவாணன் முன்னிலை வகித்தார். மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார், தலைமை மருத்துவர் பானுமதி ஆகியோர் பங்கேற்று கொழு கொழு குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர். விழாவில் டாக்டர் அருண் ராஜ்குமார், டாக்டர் அறிவழகன், டாக்டர் பூபேஷ் தர்மேந்திரா தாய்ப்பால் மகத்துவம் பற்றி பேசினர். ரோட்டரி மாவட்ட மருத்துவ திட்ட தலைவர் பழனியப்பன், முன்னாள் தலைவர்கள் சோலை, கண்ணன், சுசீந்திரன், சாமிசெழியன், கந்தசாமி, கோவிந்தராஜ், கனகராஜ் மற்றும் செவிலியர்கள், தாய்மார்கள் கலந்துகொண்டனர். முடிவில் செயலர் வசந்த்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News