- கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு காலை உணவுகளை வழங்கி பேசினார்.
கொடைரோடு:
கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. நிலக்கோட்டை தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.பள்ளித் தலைமை ஆசிரியை ஆனந்தகுமாரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு காலை உணவுகளை வழங்கி பேசினார். மேலும் பள்ளபட்டி, மெட்டூர், ஊத்துப்பட்டி பகுதியில் நேர, முழு நேர ரேசன் கடைகளை வேலுச்சாமி எம்.பி திறந்து வைத்தார். இந்த விழாவில் நிலக்கோட்டை தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் லலிதாமணிகண்டன், பள்ளபட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் நெடுமாறன், வெள்ளிமலை,தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், ராஜேந்திரன், கருப்பு, பாண்டி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.