போத்தனூர் ரெயில் நிலையத்தில் பிணமாக கிடந்த வாலிபர்
- இறந்த வாலிபர் நீல நிற சட்டை அணிந்து இருந்தார்.
- சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவை ,
கோவை போத்தனூரில் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்திற்கு இன்று காலை பயணிகள் வந்திருந்தனர்.
அப்போது பயணிகள் நடைமேடை அருகே உள்ள மின் கம்பத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.இதை பார்த்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.
அப்போது இறந்த வாலிபருக்கு 45 வயது இருக்கும். அவர் நீல நிற சட்டை அணிந்து இருந்தார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.