உள்ளூர் செய்திகள்
நூலகத்தை பார்வையிடும் பொதுமக்கள்.

செங்கோட்டை நூலகத்தில் புத்தக கண்காட்சி

Published On 2022-11-06 09:22 GMT   |   Update On 2022-11-06 09:22 GMT
  • செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து சுமார் 50,000 தலைப்புகளில் புத்தகங்கள் செங்கோட்டை நூலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் சுடலை புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.

செங்கோட்டை:

செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து சுமார் 50,000 தலைப்புகளில் புத்தகங்கள் செங்கோட்டை நூலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் நூலகர் ராமசாமி வரவேற்று பேசினார்.

வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதிமூலம், வாசகர் வட்ட இணைச் செயலாளர் செண்பககுற்றாலம், நூலக போட்டித் தேர்வு பொறுப்பாளர் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் சுடலை புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.


மதுரையை சேர்ந்த சர்வதேச டென்னிஸ் பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குனர் மாரியப்பன், செங்கோட்டை காதி நிறுவன மேலாளர் மாரியப்பன், ரோட்டரி கிளப்ஆப் குற்றாலம் தலைவர் திருவிலஞ்சி குமரன், ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை செயலாளர் அபு அண்ணாவி, எஸ்.எம்.எஸ்.எஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ஆறுமுகம், பட்டிமன்ற பேச்சாளர் சங்கர்ராமன், கடையநல்லூர் வாசகர் வட்ட தலைவர் ஜெயராமன், சுரண்டை புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், வாசகர் அய்யப்பன், மைதீன் பிச்சை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன பணியாளர்கள், வாசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News