உள்ளூர் செய்திகள்

சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி நிறுத்தம்

Published On 2023-11-26 09:35 GMT   |   Update On 2023-11-26 09:35 GMT
  • குன்னூரில் தொடர்மழை எதிரொலி
  • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

அருவங்காடு,

குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தொடர் மழை காரண மாக மலைப்பா தையில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் சுற்று லாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தற்போது தவிர்க்க வேண்டு மென மாவட்ட நிர்வாகம் அறிவு றுத்தி உள்ளது.

இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது கூடலூர் மார்க்க மாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக வருகி றார்கள். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு ள்ள மினி படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதற்காக ஆர்வத்துடன் சென்றனர்.

ஆனால் மழை காரணமாக அங்குள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்க இயலாமல் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News