உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் ரத்ததான முகாம்

Published On 2023-08-19 08:52 GMT   |   Update On 2023-08-19 08:52 GMT
  • இதில் 202 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
  • முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி நகர அரிமா சங்கம், சேவா பாரதி தமிழ்நாடு சிவராம்ஜி ரத்த வங்கி மற்றும் தனியார் டியூசன் சென்டர் ஆகிய அமைப்பினர் இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர்.

இதில் 202 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். அதில் 40 யூனிட் ரத்தம் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக்கும், மீதி சிவராம்ஜி ரத்த வங்கிக்கும் வழங்கப்பட்டது.

முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதில் சேவா பாரதி மாவட்ட தலைவர் விவேகானந்தன், கல்பனா, சந்திரசேகர், பத்திரி நாராயணன், ராஜ சேகர், விக்ரமன், வினோத், ப்ரூத்திவராஜ், சேவா பாரதி ஆதிமூலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News