உள்ளூர் செய்திகள்

நீலகிரி தேயிலை தோட்ட விவசாயிகளுக்கு பா.ஜ.க உறுதுணையாக இருக்கும்- அண்ணாமலை உறுதி

Published On 2023-06-12 14:52 IST   |   Update On 2023-06-12 14:52:00 IST
  • தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.
  • அத்தனை கோரிக்கைகளும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்

ஊட்டி,

நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் தும்பூர் போஜன், தர்மன், ராஜு மற்றும் விவசாயிகள், தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். அப்போது அவர்கள் தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யக் கோரியும், நீண்டகாலமாக தீர்க்கப்படாத தேயிலை விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் விரிவாக எடுத்துக் கூறினர்.அவர்களின் அத்தனை கோரிக்கைகளும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், தேயிலை சாகுபடி செய்யும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் அனைவருக்கும், பாதுகாப்பையும், ஆதரவையும், பா.ஜனதா தொடர்ந்து வழங்கும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்தார். இந்தச் சந்திப்பின்போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் நீலகிரி மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News