உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் போலீசாரிடம் பா.ஜ.க. வக்கீல் சங்கம், இந்து முன்னணியினர் புகார் மனு
- இந்து முன்னணி நிர்வாகிகள் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
- எழிலரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழுப்புரம்:
திண்டிவனம் பாஜக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் வக்கீல் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் வக்கீல்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் சனாதானம் குறித்து தவறாக பேசிய அமைச்சர் உதயநிதி மீதும், சங்கரமடத்தை தகர்த்தெறி வோம் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி எழிலரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.