உள்ளூர் செய்திகள்

பொன்னேரி: பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பாஜக

Published On 2022-12-06 15:37 IST   |   Update On 2022-12-06 15:37:00 IST
  • மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது
  • பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடினர்.

பொன்னேரி:

அரசியல் சாசன சட்டம் இயற்றிய தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியலின மக்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி அத்திப்பட்டு பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்நாடக மாநில கோலார் மக்களவை உறுப்பினர் முனுசாமி மற்றும் பாஜக மாநில எஸ்.சி அணி தலைவர் தடா. பெரியசாமி, மாவட்ட பொது செயலாளர், அன்பாலயா சிவகுமார், இளைஞர் அணி தலைவர் பிரவீன், பொன் பாஸ்கர், சிவ கோகுலகிருஷ்ணன் கோட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடினர். இந்நிகழ்ச்சியில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News