உள்ளூர் செய்திகள்
- 10 பெண்களுக்கு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது.
- பா.ஜனதா கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள மடத்தச் சம்பாட்டில் பா. ஜனதா நிர்வாகிகள் கூட்டம் திசையன்விளை நகர பா.ஜனதா தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் தமிழ்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
10 பெண்களுக்கு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி ராகவன், உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜன், திசையன்விளை பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் லிவ்யா உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பா.ஜனதா கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நகர பொதுச்செயலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.