உள்ளூர் செய்திகள்
தென்காசியில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்
- கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
- கூட்டத்தின்போது தொகுதி வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், மாவட்ட தலைமை அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் பாலகுருநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணி சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.