உள்ளூர் செய்திகள்

கோவையில் பிரியாணி கடை கண்ணாடி உடைப்பு; வாலிபர் மீது வழக்கு

Published On 2022-07-22 11:07 GMT   |   Update On 2022-07-22 11:07 GMT
  • சி.சி.டி.வி.காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது கடை கண்ணாடியை நள்ளிரவில் வந்த நபர் ஒருவர் உடைத்து சென்றது தெரியவந்தது.
  • கண்ணாடியை உடைத்தது கோவை செல்வபுரம் பாரதி ரோட்டை சேர்ந்த முகமத் அஸ்ரப்(38) என்பது தெரியவந்தது.

கோவை:

கோவை செல்வபுரத்தில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்து கொண்டு, கடை மேலாளர் ஷேக் அப்துல்லா(36) கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் திறக்க வந்தபோது கடையின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனையடுத்து அங்கிருந்த சி.சி.டி.வி.காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது கடை கண்ணாடியை நள்ளிரவில் வந்த நபர் ஒருவர் உடைத்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ஷேக் அப்துல்லா செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கண்ணாடியை உடைத்தது கோவை செல்வபுரம் பாரதி ரோட்டை சேர்ந்த முகமத் அஸ்ரப்(38) என்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக கண்ணாடியை உடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். முகமத் அஸ்ரப் மீது ஏற்கனவே செல்வபுரம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News