உள்ளூர் செய்திகள்

கோவையில் பீகார் வாலிபர் தற்கொலை

Published On 2023-08-17 15:23 IST   |   Update On 2023-08-17 15:23:00 IST
  • காதலி பேசாததால் வாழ்க்கையில் விரக்தி:
  • காதலியை நினைத்து மருகி தூக்கில் தொங்கினார்

கருமத்தம்பட்டி,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோசன்குமார் (வயது 21). இவர் கரும த்தம்பட்டி தண்ணீர் பந்தல் பகுதியில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ரோசன்கு மாருக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவ ருடன் பழ க்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே செல்போனில் கருத்து வேறுபாடு ஏற்ப ட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக இளம்பெண் ரோசன்கு மாரிடம் பேசவி ல்லை. இதன் காரணமாக அவர் மிகுந்த மனவேதனை அடை ந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ரோச ன்குமார் காதலி பேசாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசார ணை நடத்தினர்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட ரோசன்கு மாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News