உள்ளூர் செய்திகள்

அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா

Published On 2022-09-22 09:14 GMT   |   Update On 2022-09-22 09:14 GMT
  • நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறைதுணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்து ராமன் தலைமை வகித்தார்.
  • ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சீர்காழி

திருவெண்காடுசுவேதாரணேஸ்வரர்அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறைதுணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்து ராமன் தலைமை வகித்தார்.

சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பஞ்சு.குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், தொழிற்சங்க பொறுப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் கவுன்சிலர் சி கே பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மூத்த ஆசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News