உள்ளூர் செய்திகள்

பவானி சாகர் அணை நீர்மட்டம்

Published On 2022-08-29 09:22 GMT   |   Update On 2022-08-29 09:22 GMT
  • 3 நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

சத்தியமங்கலம்:

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 3 நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து வாய்க்காலில் வினாடிக்கு 1,600 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 300 கனஅடியும், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கன அடியும், பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 6,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

Tags:    

Similar News