உள்ளூர் செய்திகள்

பெற்றோர் திட்டியதால்உயிரை மாய்த்த 6-ம் வகுப்பு மாணவன்

Published On 2023-01-07 15:58 IST   |   Update On 2023-01-07 15:58:00 IST
  • அந்த மாணவன் சரிவர படிக்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
  • அம்மாணவன் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தான்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள குடுமியனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் லோகேஸ் (வயது11). இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த மாணவன் சரிவர படிக்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அம்மாணவன் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News