உள்ளூர் செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால்கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

Published On 2023-05-09 09:33 GMT   |   Update On 2023-05-09 09:33 GMT
  • புகழேந்தி கருப்பூர் அருகே ஞானக்கவுண்டம் பட்டி பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார்.
  • மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்றுமுன்தினம் மதியம் குடிபோதையில் இவரது கடைக்கு அருகே உள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி சுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 28). இவருக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவி உள்ளார்.

புகழேந்தி கருப்பூர் அருகே ஞானக்கவுண்டம் பட்டி பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்றுமுன்தினம் மதியம் குடிபோதையில் இவரது கடைக்கு அருகே உள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.

இதை கண்டு அதிர்ச்சி யடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உடனடியாக கருப்பூர் போலீசாருக்கும், ஓமலூர் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக மிதந்த புகழேந்தியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், புகழேந்திக்கும், அவரது மனைவி ரேவதிக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ரேவதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த புகழேந்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News