உள்ளூர் செய்திகள்
விநாயகர் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி
- கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.
குன்னூர்,
குன்னூர் நகரில் நூற்றாண்டு பழமை மிக்க விநாயகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு உள்ளது. அதன் ஒரு கட்டமாக கோவிலில் பாலாய நிகழ்ச்சி நடந்தது. கணபதி ஹோமம், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜேஷ், அறநிலையத்துறை ஆய்வாளர் ஹேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.