உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

நாகை தீயணைப்பு துறை அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா

Published On 2023-10-24 15:07 IST   |   Update On 2023-10-24 15:07:00 IST
  • பாதுகாப்பு உபகரணங்கள், கோப்புகள் சரஸ்வதி படத்திற்கு முன்பு வைக்கப்பட்டது.
  • அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட தலைமை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது.

இங்கு தீயணைப்பு வாகனங்கள் அவசர ஊர்திகள் அலங்க ரிக்கப்ப ட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன தீயணைப்புக்கு தேவையான கருவிகள், தலைக்கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கோப்புகள் சரஸ்வதி தேவி புகைப்படத்திற்கு முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

இதைப்போல் நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரணியம் உள்ளிட்ட 7 தீயணைப்பு நிலையங்களிலும் நிலை யங்களிலும் ஒரே நேரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தீபார தனை ஏற்றி வழிபட்டனர்.

பின்பு அனைத்து வாகனங்கள் ஊர்வலமாக சென்றனர் இவ்விழாவில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முகீசன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News