உள்ளூர் செய்திகள்

திட்டச்சேரி பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2023-04-22 09:50 GMT   |   Update On 2023-04-22 09:50 GMT
  • பேரணி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.
  • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வேம்பு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா முன்னிலை வகித்தார்.

பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.

இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தானம்,ஆசிரியர்கள் அகல்யா, பொற்கொடி, கீதா,வளர்மதி ஆகியோர் திட்டச்சேரி பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று தங்கள் பள்ளியில் உள்ள வசதிகள், கட்ட மைப்புகள் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

Tags:    

Similar News