உள்ளூர் செய்திகள்

பாளையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்.

பாளையில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு பேரணி - கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்

Published On 2022-10-27 09:35 GMT   |   Update On 2022-10-27 09:35 GMT
  • நேரு யுவகேந்திரா சார்பில் இன்று இந்திய அரசின் தூய்மை இந்தியா 2.0 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா 2.0 குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது.

நெல்லை:

நெல்லை மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் இன்று இந்திய அரசின் தூய்மை இந்தியா 2.0 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியை மாநக ராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். பேரணியானது வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி பாளை பஸ் நிலையம் வழியாக தனியார் கல்லூரியில் முடிவடைந்தது. இதில் கள விளம்பர அலுவலர் ஜீனி ஜேக்கப், விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டேவிட் அப்பாதுரை, மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கவுரவிக்க ப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா 2.0 குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது.மேலும் வில்லுப்பாட்டு, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

Tags:    

Similar News