பாளையில் உலக நாள்பட்ட மூச்சு குழாய் அடைப்பு நோய் விழிப்புணர்வு பேரணி நடந்த போது எடுத்த படம்.
நெல்லை அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி
- உலக நாள்பட்ட மூச்சு குழாய் அடைப்பு நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
- நாள்பட்ட மூச்சு குழாய் அடைப்பு நோயால் உலக அளவில் 30 கோடி பேரும், இந்திய அளவில் 6 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை:
உலக நாள்பட்ட மூச்சு குழாய் அடைப்பு நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை அரசு மருத்துவமனை நெஞ்சக நோய் பிரிவு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை டீன் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ மனை செவிலியர், மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நெஞ்சக பிரிவு தலைவர் டாக்டர். கிருஷ்ண மூர்த்தி பேசியதாவது:-
நாள்பட்ட மூச்சு குழாய் அடைப்பு நோயால் உலக அளவில் 30 கோடி பேரும், இந்திய அளவில் 6 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் என்று கூறி நோயின் அறிகுறிகள் மற்றும் அதை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் ஷியாம் மற்றும் டாக்டர்கள் மதன், ஜோசப் பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.