உள்ளூர் செய்திகள்

விருது வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

சிறந்த கண்தான சேவைக்கான விருது

Published On 2022-10-31 09:20 GMT   |   Update On 2022-10-31 09:20 GMT
  • முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து விருதினை வழங்கினார்.
  • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் இளங்கோவிற்கு விருது வழங்கப்பட்டது.

தென்காசி:

கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் "டிரஸ்ட்" குழந்தைகள் இல்ல நிறுவனர் திருமாறன் நடத்திய விழாவில் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு சிறந்த கண் தான சேவைக்கான விருதினை பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும், அரிமா 324-எ மாவட்டத்தினுடைய கண்தான ஒருங்கிணைப்பாளர் இளங்கோவிற்கு வழங்கினார்.

விழாவில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவம், உறுப்பினர் லட்சுமி சேகர், ரத்ததான மாவட்ட தலைவர் ஆசிரியர் திருமலை கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News